WHAT IS THE LAW. WHY NOW NOT VALID
நண்பர்களே! இப்படிப்பினையின் தலைப்பானது நியாயப்பிரமாணம் என்றால் என்ன? நியாயப்பிரமாணம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா என்று கேட்டால். ஆம். நிச்சயம் ஒவ்வொரு கிருஸ்தவனும் இதைப்பற்றின புரிதலை கொண்டாகவே வேண்டும் என்பதுதான் உன்மை. இப்போது இருக்கும் கிருஸ்தவர்களிடையே. நீங்கள் நியாயப்பிரனமாணம் என்றால் என்னவென்று கேட்டால், உடனே அவர்களின் கண்கள் வானத்தை நோக்கி பார்பதும், அவர்களின் கைகள் தன் கன்னங்களை தாங்குவதும் தான் நடக்கும். அதற்க்கு காரணம் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது என்பதே உன்மை. சரி இது இயல்புதான், இப்போது ஏன் இந்த நியாயப்பிரமாணத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம். இந்த நியாயப்பிரமானது பரலோகத்தின் தேவனனானவர் மோசேவை கொண்டு இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளாகும். அப்படி கொடுக்கப்பட்ட கட்டளைகளை அவர்கள் கைக்கொள்ளாவிடில், அவர்களின் மேல் சாபமானது கட்டளையிடப்படும். உபாகமம் 27:26 இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக ; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள் . ஆக இந்த வசனத்தின் மூலம் ந...